Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Wednesday, December 27, 2023

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா & திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

 

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

&

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

4 ஆம் ஆண்டு 

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 30.12.2023



Sunday, August 13, 2023

நன்றி அருட்தோழி

அன்புடையீர், அருளுடையீர் வணக்கம்,

நான், கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக சிவ வழிபாட்டிலும், சித்தர்கள் வழிபாட்டிலும்  ஈடுபட்டு வருகின்றேன்.  

இருந்தாலும் போகர் மற்றும் கருவூரார் வழிபாட்டில் அதிகம் ஈடுபாடு இருந்தது.. அகத்தியர் வழிபாட்டில் ஈடுபட்டதில்லை... 

ஆனால், சிற்சில சோதனைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டு இறைவன் அருளால் எனக்கு நானே சில சுயபரிசோதனைகள் செய்து கொண்டதில்,   

ஸ்ரீஅகத்திய பெருமான் அருளாசியானது  என்னையும், அருட்சிவஞானபீடத்தை தேடி வந்துள்ளவர்களுக்கும்   

கடந்த ஆறு வருடங்களாக குறைவின்றி ஸ்ரீஅகத்திய பெருமானின் கருணை மழை பொழிகின்றது. 

வருடந்தோறும் ஸ்ரீஅகத்தியர் பெருமானுக்கு மார்கழி மாதத்தில்  திருக்கல்யாணம், 

மாதம் தோறும் பௌர்ணமி இரவில் ஸ்ரீஅகத்தியர் லோபமுத்ரா பல்லாக்கில் வலம் வருதல் 

போன்ற நிகழ்ச்சிகள் பெருமானின் கருணையினால் நமது அருட்சிவ ஞான பீடத்தில் நடந்தேறி வருகின்றது. 

எல்லாம் இறைவன் கருணை.. 

இதற்கு பல காரணிகளில் ஒரு  காரணியாக இருந்த 

அருட்தோழி-க்கு  நன்றிகள் பல . 

அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா  

அன்புடையீர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 

16 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்

 ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 

6 ஆம் ஆண்டு துவக்க விழா 

சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) ஸ்ரீசோபகிருது ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 18.08.2023) அன்று காலையில்  நடைபெற உள்ளது. 

அச்சமயம்  சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப பூஜை, சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.  

இந்நிகழ்வில்,

நேரில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ள 

வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு  

9943117734 என்ற எண்ணிற்கு 

Telegram App வழியில் செய்தியாகவோ 

அல்லது 

Arutsiva Gnana Peedam

https://t.me/+Lnt1AJsufxM3NTY9

மேற்படி  Telegram App குழுவில் இணைந்து கொண்டு 

 தமிழ்  அல்லது ஆங்கிலத்தில்  தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு 

செய்தியாக (Text Message) மட்டும் 

அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  

தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் அனைத்தும்

தெய்வீக சித்தர்கள் வழிபாட்டு சேவையின் அடிப்படையில்  ( எவ்வித கட்டணமும் இன்றி) உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல்லவை எல்லாம் பெற்று  வளமுடன் வாழ்ந்திடும் பொருட்டு 

 பௌர்ணமி நாட்கள், ஸ்ரீஅகத்தியர் திருக்கல்யாண விழா மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைகளுக்கு 

மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  


இங்ஙனம். 

அருட்சிவஞான பீட அன்பர்கள் 

அகில உலகம்.